ORS:8
தன் சொந்த ஊரின் அருகே வர வர கனகவேல் மகளிடம் ஆயிரம் கதைகள் சொன்ன படி வந்தார்.அதனை கேட்டும் கேட்க்காது வாகனத்தை செலுத்திய படி வந்தான் வீரவேல்.
அவர்கள் வீடு வந்து இறங்கியதுமே அண்ணாமலை வந்து வரவேற்று 'கலை உன் அண்ணி வந்திடுச்சு பாரு"எனும் போதே செல்வா ஓடி வந்து புன்னகைத்து "அண்ணி வாங்க" என்றான்.
தம்பியின் கையை முறுக்கியவன் "ஏன் உங்களுக்கு இந்த அண்ணேன் வந்தது கண் தெரியலயாக்கும்" என இன்னும் திருக,
"மா" என்றான் அவன் சத்தமாய்,
"அச்சோ செல்வா இந்த பக்கம் வா "என தங்கமயில் அவள் பக்கம் இழுத்து கொண்டாள்."பாருடா"அவர்கள் இருவரின் பாசபிணைப்பை கண்டு வீராவின் புருவம் உயர்ந்தது.
அவர்கள் பேசும் போதே ஆரத்தியுடன் பாக்கியம் வர,மகன் முகம் காணாது மருமகளை பார்த்து புன்னகைத்து இருவருக்கும் ஆலம் சுற்றி திருஷ்டி எடுத்து உள்ளே வர செய்தார்.
கலை தங்கமயில்லை அழைத்து கொண்டு உள்ளே செல்ல,வீரா எதுவும் பேசாது பக்கியத்தை பார்த்த படி நின்றான்.
தங்கமயில் அவனை திரும்பி பார்த்து கொண்டே முன்னால் சென்றவள் அவர்கள் வீட்டினை கண்டதும் அப்படியே நின்றாள்.
"என்ன அண்ணி அப்படியே நின்னுட்டிங்க?உள்ள வாங்க உங்க வீட்டு அளவுக்கு மச்சு வீடு இல்லைனு பாக்குறீங்களா?"என கேட்க,
"ப்ச்...அப்படி எல்லாம் இல்லை.கலை வீடு அழகா இருக்கு" என்றாள்.
"அப்போ வாங்க இந்த அரண்மனையை சுத்தி பார்க்கலாம்"என உள்ளே அழைத்து சென்றாள்.
பாக்கியமோ முடிந்தவரை மகன் முகம் காணாது தவிர்த்தவர்,அதற்கு பின் முடியாது "யய்யா என்ன அம்மாவை அப்படி பாக்குற?"என கேட்க,
"இல்லை உனக்குள்ள எத்தனை கே.ஆர்.விஜயா,சரோஜா தேவி சாவித்ரி எல்லாம் ஒழிஞ்ச இருக்கு பாக்கிறேன்" என்றவன் நக்கலாய் சென்று தொட்டியில் உள்ள ம தண்ணீரீல் முகத்தை அடித்து கழுவி கொண்டே பாக்கியத்தின் அருகில் வர,
பாக்கியம் ஒன்றும் தெரியாது போல் முழிக்க,
"இப்படி முழிக்காதமா எதாவது சொல்லிட போறேன் "என்றான் கடுப்பாய்,
"ராசா அம்மா மேல கோவமா "என்றார்.
"இல்லை உனக்கு எங்கின கோவில் கட்டலாம் யோசிக்கிறேன்."
"ராசா நிஜமாவாயா!" என்றார் விழிகளில் ஆர்வம் மின்ன,
"அம்மா கம்முனு போய்டு" என்றவன் "எனக்கு நீ அப்படி கல்யாணத்தை பண்ணுனதை கூட மன்னிச்சுடுவேன். ஆனா முத ராத்திரி அன்னைக்கு சூரியகாந்தி பூவை சுத்தி கட்டி வைக்க சொன்ன பாரு அத மட்டும் மன்னிக்கவே மாட்டேன்" என்றான் கடுப்பாய்,
"இல்லை ராசா உனக்கு பிடிக்கும்னுதேன்!" என பாக்கியம் இழுக்க,
"ஆமா எல்லாம் இங்க பிடிச்சுதேன் நடக்குது பாரு" என தொடங்க,
"அய்யா மயிலு நல்லா புள்ள சாமி"
"அதுக்கு?"
"இல்லை சொன்னேன்" என்றார்.
"ஆத்தா நீ சொன்ன வரைக்கும் போதும்" என முறைத்தவன்,அவர் பார்வையை கண்டு "என்னத்துக்கு இந்த லுக்கு தெரியலயே?" என்றவன் "சொல்ல வேண்டியதை சொல்லிட்டு கிளம்புத்தா" என்றான்.
"இல்லை உங்க அப்பா உன்கிட்ட ஒன்னு சொல்ல சொன்னாரு"
"என்னனு?"
"அது மயிலுக்கு வேலை அங்கினதேன்!"
"எங்கினத்தேன் "
"மதுரையில"
"ஆமா அதுக்கென்ன?"
"இல்லையா நீ சிங்கப்பூர் போற வரைக்கும் நீயும் அதுகூடவே அங்கேயே" என தொடங்க,
"ஓ...வீட்டோட மாப்பிளையா நான் அங்க கிடக்கணும் அதானே,எல்லாம் உன் புருஷன் ஏற்பாடு,நான் அவரை சொன்னதுக்கு என்னையே போட்டு பாக்குறாரு" என முறைத்தான்.
"இல்லையா எப்படியும் நீ சீக்கிரம் சிங்கப்பூர் போய்டுவ அதுவரைக்கும் மயிலு ஏன் இங்குட்டும் அங்குட்டும் அலைஞ்சுகிட்டு "என மெதுவாய் கூற,
"மவன் மேல அம்புட்டு அக்கறை,ஆமா இது தானா இல்லை இன்னும் எதாவது இருக்கா, முழுசா சொல்லுத்தா,சொல்லி முழுசா என்னை வித்துடு "என கூற,
"யய்யா "என தொடங்க,
"மா" என்றான் பற்களுக்கு இடையே வார்த்தையினை துப்பி,கோவம் மட்டும் மட்டுபாடாது அவன் குரல் உயர,
இவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் அத்தனயும் அச்சு பிசாரது பெண்ணவள் செவி தீண்டியது.
வீட்டினை சுற்றி காட்டி கொண்டிருந்த கலை" இதான் அண்ணே ரூமு "என கூற,
அவனின் அறை என்றதும் தன்னையும் மீறி அவ்வறைக்குள் உள்ளே செல்ல,அறை முழுவதும் அவனின் பொருட்கள்,ஒரு சின்ன மரபீரோ,அவனின் புகைப்படம்,கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆள் உயர ஸ்டிக்கர் கதவிற்கு பின்னால் ஒட்டி இருக்க,ஏதோ ஒரு வாசனை திராவியம் கூடவே ஒரு பவுடர் டப்பா ,தன்னை பாதி வரை மட்டுமே காட்டும் கண்ணாடி என அவன் அறையை அலசி ஆராய்ந்துவிட்டாள் விழிகளில்,
"என்ன அண்ணி அப்படி பாக்குறீங்க?"என்றாள்.
"ம்ம்ம்..."எனும் போதே அவளையும் மீறிய உணர்வுகள் அவள் மனதில்,கடந்து சென்ற நாட்களாய் இயல்பாய் அனைத்தையும் ஏற்று கொண்டு அவன் நடப்பதை பார்த்து கொண்டு தானே இருக்கிறாள்.அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் அவளையும் மீறி அவள் ஆழ் மனது சேமித்து கொள்ளும் மாயமென்ன,
ஏன் சந்தோஷோடு திருமணம் எனும் போது கூட மனம் இத்தனை தவித்தது இல்லையே.ஏன் அவனை பற்றிய எண்ணம் வந்த உடனே அவன் கலவர முகத்தில் பிரதிபலிக்கும் உணர்வுகளை என்ன என்றே நினைக்க தோன்றியது அவளுக்கு.அவனுடனான திருமண முறிவு கூட அவளை இத்தனை தூரம் பாதிக்கவில்லையே,ஆனால் இவன் முகம் தெரியும் முன்னே அவனை பார்க்க தோன்றிய ஆவலை ஏற்படுத்தியவன்.அவனோடுவான இரு இரவுகளும் கடந்து செல்ல அவளுக்கு எந்த தயக்கமும் இல்லை.இருவரும் பேசி கொண்ட வார்த்தைகள் சொற்பம் தான்.ஆயினும் அவள் விழியோடு விழி பார்த்து பேசும் அவனின் திண்மை பிடித்திருந்தது பெண்ணவளுக்கு!
அதுவும் காலையில் காரில் வரும் போது அவன் தலை கோதிய படி காரினை செலுத்த,இடையில் நிறுத்தி கனகவேலிருக்கும் அவளுக்கும் தேநீர் வாங்கி கொடுத்து,அங்கிருந்த படியே அவள் விழி பார்த்து எதுவும் வேண்டுமா என கேட்கவும்,அவன் புருவ ஏற்ற இறக்கத்தில் கிறங்கி தான் போனாள் பெண்ணவள்! அத்தனையும் அச்சு திசராமல் அவள் நினைவடுக்கில் மீளும் நேரம்,
"அண்ணி அண்ணி" என உலுகினாள் கலை.
"ஹான் கலை" என கேட்க,
"என்ன அண்ணி நான் கூப்பிகிட்டே இருக்கேன் நீங்க அமைதியா இருக்கீங்க" என்றாள்.
"தண்ணீ வேணும் "என்றதும் கலை அதனை எடுக்க செல்ல,மெல்ல ஜன்னல் பக்கம் வந்தவளுக்கு எதிர்புறத்தில் வேகமாய் முகத்தை தண்ணீரில் அடித்து கழுவி கொண்டிருக்கும் வீராவை பார்க்க,அவளையும் மீறி ரசனையாய் விழிகள் அவன் மீது பட்டு மீண்டது.
எங்கோ வானொலியில்
"ஒ ரசிக்கும் சீமானே
ஒ ரசிக்கும் சீமானே
வா ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்
ஒ ரசிக்கும் சீமானே!"
என அவள் செவி வழி தீண்ட அவள் விழிகளோ அவனை அளவிட ம்ம்ம்...ரசிக்கும் சீமான் தான் என இதழ் முணுமுணுக்க,அவனோ முகத்தை தாயின் சேலையிலே துடைத்து விட்டு சுப்பிரமணி அருகில் அமர்ந்தவன் வேகமாய் அவன் மொழிந்த அனைத்தும் தெள்ள தெளிவாய் பெண்ணவளுக்கு கேட்டது.விழிகளில் கண்ணீர் வழிய அதனை கலை பார்க்காது துடைத்தவள் அவள் கொண்டு வந்த தண்ணீரை குடித்து விட்டு அவ்வறையை விட்டு நகர்ந்தாள்.
அவர்கள் சம்பாஷனையை கேட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணி "விடு மாப்பிள "என அவன் தோளில் கையை போட்டுக்கொண்டு "ஏன்யா இப்படி அவுகள வையுற?" என்றான்.
"ப்ச்" என வாகாய் தண்ணீர் தொட்டி மேல் அமர்ந்தான் வீரா.
"ஏன்யா உன் மூஞ்சி இப்படி இருக்கு,பவுடர் அடிக்கலயா நீ?"
வீரா முறைக்க,
"இல்லை மாப்பிள நீ க்யூட்டிக்யூரா பவுடர் தானே அடிப்ப,அதான் அங்குன கிடைக்கலயோன்னு கேக்கேன்" என்றான்.
"யோவ் உன்ன கொல்ல போறேன்" என எழ,
"சரி விடுயா "என்றவன் " அத்தை நீங்க உள்ளர போய் வந்தவங்கள கவினீங்க நான் மாப்பிள்ளையை கூட்டியறேன்" என்றான் அவன்.
இதான் சாக்கென்று பாக்கியம் வேகமாய் வீட்டின்னுள் நுழைய,அங்கயர்கண்ணி அவனை தேடி வரவும் சரியாய் இருந்தது.
"மாமா" என்றாள்.
"ஏன்மா?"என்றான் நிமிர்ந்து பார்த்து,
"நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நானு எதிர்பார்க்கவே இல்லையே!"என்றாள் அழுத படி,
"எப்படி?"
"இப்படி உங்க மாமா பொண்ண கட்டிக்கத்தேன். என்ன வேணாம் சொல்லிட்டீங்களா?" என்றாள் மூக்கினை சிந்தி கொண்டே,
"நீயுமா!" என்ற ரீதியில் சுப்பிரமணி பார்த்து வைக்க,
"யாருமா சொன்னது உனக்கு?"என்றான் வீரா.
"ஊரே பேசிக்குதே!"
"என்னன்னு?"
"போன இடத்தில உங்களுக்கும் அவளுக்கும் ஏதோ எசக்கு பிசாக்காகி அதுனாலதேன் அந்த மாப்பிள ஓடிப்போய் நீங்க அவ கழுத்துல தாலி கட்டினிங்கலாம்."
"ஏதே இசக்கு பிசக்கா இப்படி எல்லாம் யாருடா பரப்பி விடறது.அதுவும் ஒரு நாள்ல "என எண்ணி கொண்டு,நண்பனை முறைக்க,
"எனக்கு தெரியாது மாப்பிள்ள"என்றான் வேகமாய் சுப்பிரமணி.
"அப்போ நீதேன்" என்றான் முறைத்து பின் "இல்லை என்னை பெத்த தெய்வம் இருக்கு பாரு அதுவா கூட இருக்கும்" என்றான்.
சுப்பிரமணி முழிக்க,
அவன் விழிப்பதை பார்த்து " அட கிராதாக நேத்து தான டா என்னை மஞ்ச தெளிச்சு ஈர துணியை கழுத்துல போட்டு வெட்டினீங்க இன்னும் என்னடா?"என்றான் பாவமாய்,
"கல்யாணம் ஆனாலும் உன் மவுசு குறையில யோவ் உனக்கு இன்னும் ஏகப்பட்ட ஆஃபர் வருதுயா மாப்பிள",
"நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லன்னு உன்ன கொல்லத்தேன் போறேன்."
"பாரேன் பொண்டாட்டி போலீஸ்னா நீரு பொசுக்கு பொசுக்குன்னு துப்பாக்கியை தூக்கி எங்கள சுடுவீங்களோ!"
"அட கொயால நானே துக்கத்துல தொண்டை அடிச்சு கிடக்கேன்.இதுல நீ சலம்பிகிட்டே திரிஞ்சிட்டு இருக்க,"
இவர்களை பார்த்த படி அழுது கொண்டிருந்த அங்கயர்கண்ணியை கண்டவன்,
"என்ன அங்கு?"
"நீங்க இப்படி பண்ணிருக்க கூடாது மாமா,அவ இல்லனா என்னைத்தானே கல்யாணம் பண்ணியிருப்ப இடையில அவ வந்து உன்ன தூக்கிட்டு போய்ட்டாளே!" என்றாள் தேம்பி,
"தூக்கிட்டு போவ உன் மாமன் என்ன வடையாக்கும்" என சுப்பிரமணி முணுமூணுக்க,
அவனை முறைத்து விட்டு" அடியே என்னதுக்கு இப்படி அழுது வடியுற?"என அவள் அருகில் வந்தவன் "இங்க பாரு அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன்.எனக்கு கலை மாறிதேன் நீயும்,இந்த கல்யாணம் நடக்காட்டியும் நான் உன்ன கட்டிருக்க மாட்டேன் டி.இன்னும் சின்ன புள்ள மாதிரி மூக்க சிந்திட்டு கிடக்க இதுல இப்போவே கல்யாணம் தேவையா உனக்கு.போ டி இன்னும் ரெண்டு வருஷம் போவட்டும்.நானே நல்ல டீச்சர் மாப்பிள்ளையா பார்த்து கட்டி வைக்கிறேன்" என்ற படி அவள் தலையினில் குட்ட,
"இந்த கிளம்பிட்டான் டீச்சர் டீச்சர்ன்னு அய்யா ராசா விட்டா ஒரு டீச்சர் மாப்பிளைகள் தேவை என்றால் என்னை அணுகவும்ன்னு போட் வச்சுடுவ போல" என சுப்பிரமணி கூற,
அவன் பேச்சை காதில் வாங்கி கொண்டே பெண்ணவள் தலையில் இன்னும் ரெண்டு குட்டு வைக்க "மாமா வலிக்குது" என்றாள் சிணுங்களாய்,
"போடி இனி எங்குட்டாவது நின்னு நின்னு மூக்கை சிந்திட்டு திருஞ்ச உன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது" என அவளை அனுப்பி விட்டு நண்பன் பக்கம் திரும்ப,
"இப்போ எதுக்கு டேக் டைவர்சன் எடுத்து இங்குட்டு வரான்" என எழுந்தவன் நகர தொடங்க,
"இரு டி மாப்பிள எங்க ஓடுற" என அவனையும் இழுத்து கொண்டு தண்ணீர் தொட்டியில் குதித்தான் வீரா.
பாக்கியம் உள்ளே வந்தவர் கலை அறையில் அமர்ந்திருந்தவளை கண்டு "யாத்தா வா வெளிய வந்து நம்ம ஜாதி சனம் எல்லாத்தையும் பாரு.அம்புட்டு பேரும் சாப்பிட வா இங்க வந்திருக்காக,உன்ன பார்க்க தானே!நீ பாட்டுக்கு இங்கன உக்காந்தா பொண்ணு எங்க எங்கன்னு என் தலையை தானே உருட்டாறாங்க" என தங்கத்தின் கையினை பற்றி அழைத்து சென்றார்.
அவளை அழைத்து கொண்டு போய் பெண்கள் அமர்ந்திருந்த குழுவின் நடுவில் அமர வைத்து 'இந்தாரு மதனி என் மருமவ பெரிய போலீசாக்கும் பார்த்து சூதனமா பேசணும்" என அவரும் ஓர் பக்கம் அமர,
"சரித்தேன் விட்டா இவ,என் மருமவ கீழ உக்கார மாட்டான்னு பட்டு துணி விரிப்ப போலவே" என கூற,
"பின்ன என் மருமவ என்ன உங்கள மாதிரியா "என வியர்வை பூத்திருந்த மருமகள் முகத்தை துடைத்து விட,
அங்கிருந்த அனைவரும் சிரிக்க பெண்ணவளுக்கே அவளையும் மீறி இதழ் சிரித்தது.
அங்கிருந்த கலைக்கும் செல்வாவிருக்குமே புன்னகை தான்.
அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்த கனகவேலிருக்கு ஒற்றை பிள்ளையாய்,சொந்த பந்தம் எதுவுமின்றி மகளை தனித்து வளர்த்தவர் மனதில் எப்போதும் ஓர் ஆசை உண்டு தன் சொந்த பந்ததிற்க்கு நடுவில் மகள் வளரவில்லேயேன அதனால் இந்த நிகழ்வு அவருக்கு அத்தனை நிறைவை கொடுத்தது.
"என்னடி பாக்கியம் என் மவனைதேன் எங்க பக்கம் விடாம உன் சேலைகுள்ள
மறைச்சு வச்சுக்கிட்ட இப்போ என் பேரனையும் கொண்டு போய் உன் அண்ணன் மவளுக்கு கட்டி கொடுத்துருக்க" என்ற படி அமர்ந்தவரை கண்டு,
கலை "ஆத்தி இந்த ஆயா வந்துட்டு டா.இது சும்மா வந்தாலே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை மூட்டி விடும்.இதுல இன்னைக்கு வந்திருக்கே" என கலை முனங்க,
"ஆமா அக்கா இந்த ஆயா பேசுற பேச்சை யாரு நிறுத்த?"என்றான் செல்வா.
"டேய் செல்வா நீ போய் சுருக்கா அண்ணனை கூட்டியா" என்றாள் கலை.
"ஆமாக்கா அண்ணேந்தேன் இந்த கெழவிக்கு சரி" என அங்கிருந்து சென்றான் செல்வா.
"யம்மா நீதேன் என் பேரன் பொண்டாட்டி யா எங்க எழுந்து நில்லு பாப்போம்" என கூற,
என்ன செய்வது என புரியாது பாக்கியத்தை பார்த்தாள் தங்கமயில்.
"இது என் சின்ன மாமியா.ஏதோ உன் மாமனை நான் கடத்திட்டு வந்த கணக்கா எப்போவும் ஏதவாது பேசிட்டே கிடக்கும்.இது வாயில விழாம எழுந்து நில்லு" என்றார் பாக்கியம் மெதுவாய்
பெண்ணவள் எழுந்து நிற்க,
"ம்ம்க்கும் இவ என்னடி இப்படி இருக்கா?" என அருகில் இருந்த பெண்ணிடம் முணுமுணுத்து,"ஏன்டி பாக்கியம் ஊர்ல பொண்ணே இல்லனு கணக்கா இந்த புள்ளயை என் பேரனுக்கு கட்டியாந்துருக்க,அவன் நிறதுக்கும் கட்டழகுக்கும்,அவன் பேச்சுக்கும் எங்க பக்கம் அத்தனை பொண்ணுங்க வரிசை கட்டும் போது நீ போய் இவள கூட்டியாந்துருக்க,என் பேரன் அழகுக்கு சரியாவளா இவ" என தொடங்க,
"அத்தை அவ போலீஸ்ல வேலை பாக்குது."
"அதுக்காக என்ன பண்ண சொல்லுற?பொண்ணுனா நல்லா மூக்கு முழியுமா இருக்க வேணாம்.இவள பாரு ஏதோ கம்பு மாதிரி நீண்டு கிடக்கா.என் பேரன் வாழ்க்கையை இப்படி அள்ளி கவுத்துட்டியே!பேசாம இந்த புள்ளய வெட்டி விடு என் பேரனுக்கு நான் வேற பொண்ண பாக்குறேன்" என்றதும்,
சட்டென ஓர் நிசப்தம் நிலவியது பெண்கள் கூட்டத்தில்,வயதில் பெரியவர் என்பதால் பாக்கியம் எதுவும் பேசாது விழிக்க,கூடவே நாம் ஒன்று சொன்னால் இன்னும் கிளம்புவாளே என அமைதியாய் இருக்க,
அந்த நொடியில் என்ன எதிர்வினையாற்றுவது என்பது கூட புரியாது நின்றிருந்தாள் தங்கமயில்.இது போல் அவள் கடந்து வந்த மனிதர்கள் ஏராளம் தான்.ஆனால் இப்படி பேசுபவர்களை அவர்கள் முகத்திற்கு நேராய் பதில் சொல்லி விடுவாள்.ஆனால் இன்று ஒருவர் அவளை பற்றி இத்தனை பேசியும் தன் கோபத்தை முடிந்த மட்டும் அடக்கி கொண்டு அமர்ந்திருந்தாள்.
தூரத்தில் நின்ற கனகவேலிற்க்கோ மகளின் நிலை கண்டு பரிதாவிப்பு தான்.என்ன செய்வது என தவிக்க,
"என்னடி இப்படி அமைதியா இருக்க,என் பேரனுக்கு என்ன வழி?இப்படி அவன் வாழ்க்கையை கெடுத்து வச்சிருக்க"எனும் போதே பெண்ணவள் சீற்றம் ஏறி 'வேணும்னா நீயே உன் பேரனை வச்சுக்கோ' என பேச இதழ் திறக்கும் முன் அவள் தோளில் கை போட்ட படி அமர்ந்தான் வீரா.
சட்டென அவனின் ஸ்பரிசத்தை பெண்ணவள் உணரும் முன்னே இன்னும் அவளை நெருங்கி அமர்ந்து" அப்புறம் கெழவி என்ன இங்குட்டு ஒரே சத்தம்?"என்றான் புருவம் உயர்த்தி,
"ஒண்ணுமில்ல ராசா இந்த புள்ளத்தேன் உன் பொண்டாட்டி னு பாக்கியம் சொன்னுச்சு அதேன் என்ன எதுன்னு விசாரிச்ச்சேன்."
"ஓ...எப்படி என் பொண்டாட்டி" என்றவன் கைகள் மெல்ல இறங்கி அவள் இடையினை தொட்டு மீள,
"அதேன் உன் அழகுக்கு இவ" என தொடங்க,
"எனக்கேத்த ஜோடிதானு சொல்ல வந்திருக்க அதானே!"என்றான் அவரை பேச விடாது.
"இல்லப்பு என்ன இருந்தாலும் உன் நிறத்துக்கும் "என மீண்டும் தொடங்கியவரை,
"அட நீ வேற கெழவி நம்மள மாதிரி நிறமா இருந்தா ஏதோ வியாதியாம்.இப்போ வெளிநாட்டுல கண்டு பிடிச்சுருக்காக.அது என்னவோ ஒரு பெரிய வியாதி போல,அதுனால இப்போ எல்லாம் வெளிநாட்டுகாரன் எல்லாம் போய் வெயில்ல படுத்து கிடக்கான் நீ வேற "என அவரை திசை திருப்ப,
"அப்படியா சொல்ற?"
"பின்ன என்ன பொய்யா சொல்ல போறேன் என்றவன் அவர் காதின் அருகில் சென்று "கெழவி என் பொண்டாட்டியை நீ ரொம்ப சாதாரணமா நெனைச்சுட்ட,அவ பெரிய போலீஸ்க்காரி ரொம்ப பேசிட்டே இருந்த சட்டுனு துப்பாக்கியை எடுத்து போட்டுருவா.அப்புறம் அய்யோ ஆத்தானாலும் உசிரு வராது" என்றவன் "மயிலு எழுந்துரு எவ்ளோ நேரம் இப்படி உக்காந்து இருப்ப,கலை மதனியை உள்ள கூட்டிட்டு போ "என்ற படி எழுந்தவன் அவளை நோக்கி கையை நீட்ட,அவன் கைகளை நீடுவான் என எண்ணதவள்,அவன் கரத்தை பற்றி எழுவும் சட்டென விழ போனாள்.
"அட தங்கம் அவன் கையை இறுக்கமா பிடிச்சாதேன் என்ன?"
"அதானே ஏண்டி அவன் கையை தானே புடிக்க சொன்னான்.அதுக்கேவா" என சிரிக்க,
"அத்தாச்சி" என முறைக்க முயன்று அவர்களின் கேலியில் ஆணவனும் சிரிக்க, அவன் அருகில் விடை தெரியாது முழிக்கும் குழந்தை போல் நின்றாள் பெண்ணவள்.
அவள் நின்ற கோலம் கண்டு உதிர்ந்த சிரிப்பை அடக்கி கொண்டு அவள் எதிர்பாரா நேரம் அவள் இடை தொட்டு தூக்க,
"அடியாத்தி என்னடி இது கூத்தா இருக்கு.இத்தனை பேருக்கு நடுவுல பொண்டாட்டியை தூக்குறான்"என வாயில் கைவைக்க,
"அடியாத்தி எத்தனை பேருக்கு நடுவுலயும் என் பொண்டாட்டியை நான் தூக்குவேன்.வேணும்னா தாத்தானை விலக்கி விடு நான் வேணா உன்ன தூக்கிட்டே சுத்துறேன்"என்றான் அவரிடம்!
"ம்ம்க்கும் உன் தாத்தன் தூக்கிட்டாலும்" என கூறியவரை கண்டு,
"இரு உனக்கேதுக்கு அந்த குறை என் பொண்டாட்டியை ரூம்ல விட்டுட்டு வரேன்" என அவளை தூக்கி கொண்டே அறையில் விட்டவன் "கலை அண்ணியை என்னனு பாருத்தா" என ஓர் நிமிடம் கூட அவளை காணாது சென்று மறைந்தான் வேலன்.